சென்னை திரும்பிய முதல் நாளிலேயே பாஜகவை தாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. 

தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  அமெரிக்க பயணம் வெற்றிகரமாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 17 நாட்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களை சந்தித்து ரூ.7,616 கோடி முதலீடு பெறப்பட்டதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். 

தொடர்ந்து ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் அதிபர் பேசி மன்னிப்பு கேட்டது தொடர்பாக முதல் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, 
ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கைகளை ஓட்டல் உரிமையாளர் முன்வைத்தார் என்றும், அதனை நிதியமைச்சர் கையாண்ட விதம் மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்றும், இதனை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister MK Stalin attacked the BJP on the first day of his return to Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->