பயிர்க்காப்பீடு : அதிரடி அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


பயிர்க்காப்பீடு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதில், பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.2,057 கோடி நிதி தொகையை அனுமதித்துள்ளது. 

மேலும், பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ-டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎப்சி எர்கோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை சாகுபடி செய்யப்படும் குறுவை பருவத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் அளிக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Crop insurance Tamil Nadu government order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->