போடு ஜால்ரா, படு நேக்கா, பிடிக்கணும் காக்கா! DCM உதயநிதி - செல்வப்பெருந்தகையை விமர்சித்த பாஜக! - Seithipunal
Seithipunal


உதயநிதி துணை முதலமைச்சராவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவிக்கையில், "I.N.D.I கூட்டணி எஃகு கோட்டை போல் வலிமையாக உள்ளது.

அவதூறுகளை பரப்பி வரும் பாஜகவை கண்டித்து I.N.D.I கூட்டணி சார்பில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த மாநாட்டில் திமுக உள்ளிட்ட I.N.D.I கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அழைப்பு விடுக்க உள்ளோம்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் துணை முதலமைச்சராவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துருந்தார்.

இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையான விமர்சனங்களை முன்வந்துள்ளார்.

அதில், "அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் துணை முதலமைச்சராவதை காங்கிரஸ் வரவேற்கிறது" - செல்வப்பெருந்தகை.

"அடி மீரா, போடு ஜால்ரா, பின்பாட்டுகள் பாடடி ஜோரா. அடி ரேகா, படு நேக்கா, நாம் சமயத்தில் பிடிக்கணும் காக்கா!" பாடல் வரிகள் நினைவில் வருகிறது " என்று நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DCM Udhay Congress DMK Selvaperunthagai BJP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->