இந்தியாவில் முதல் முழு ஊரடங்கு அறிவிப்பு.! சனி, ஞாயிறு இரு நாட்களும் 144 தடை.! கொரோனா மூன்றாவது அலையின் எதிரொலி.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, வருகின்ற வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல், திங்கள்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இரண்டாவதாக கேரளா மாநிலத்தில் நோய் பரவல் தீவிரம் அதிகரித்து உள்ளது. இதேபோல் தலைநகர் டெல்லியிலும் நோய் பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவல் உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து டெல்லி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா மூன்றாவது அலைக்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது டெல்லி அரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

delhi full lockdown in 2 days


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->