விதிமுறைகளை மீறிய பிரச்சாரம்..! திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது பொதுமக்கள் புகார்..!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில், தேர்தல் விதிமுறைகளை தாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை மற்றும் 30-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, தேர்தல் விதிமுறைகளின் படி வாக்குப்பதிவு நடைபெறும் ஒரு நாளுக்கு முன்னரே பிரசாரத்தில் ஈடுபடும் வேலைகளை அனைத்து கட்சிகளும் கைவிட வேண்டும் என்பது கட்டாயம். அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நேற்றே முடிந்தது. 

இந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தில்  அந்தநல்லூரில், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த செயலை கண்டித்து பொதுமக்கள் உட்பட மாற்றுக்கட்சியினர் கே.என்.நேருவின் வாகனத்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதை தொடர்ந்து, திமுகவினர் பொதுமக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு மற்றும் திமுக வேட்பாளர்கள் உட்பட பலர் மீது சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk campaign against to the rules


கருத்துக் கணிப்பு

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் நகர்வுகள் எப்படி உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் நகர்வுகள் எப்படி உள்ளது?




Seithipunal
--> -->