அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய வழக்கு! திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆஜராக சம்மன்!  - Seithipunal
Seithipunal


சென்னை: கிண்டியில் மற்றொருவருக்காக ஒதுக்கப்பட்ட அரசு சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களின் மூலம் அபகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோருக்கு மே 6-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை மாநகர மேயராக பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொழிலாளர் காலனியில் உள்ள நிலத்தை, அதன் உரிமையாளரான எஸ்.கே. கண்ணன் என்பவரிடமிருந்து கையகப்படுத்தி, தனது மனைவியின் பெயருக்கு மாற்றியதாக பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்.  

அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து, 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜி. ஜெயவேல் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.  

இவ்வழக்கை ரத்து செய்ய முயன்ற மா. சுப்பிரமணியனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மறுக்க, விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் காரணமாக அவர் ஆஜராகவில்லை என்றாலும், நீதிமன்றம் இம்முறை இருவரும் கட்டாயம் மே 6-ம் தேதி நேரில் வர வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister Ma Subramaniyan case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->