அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாஇன்று நடைபெற்றது. இதில், 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

இந்நிலையில், புதிய அமைச்சர்களாக பதிவேற்றுக் கொண்ட நான்கு பேருக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு  அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கரும்பு ஆயத்தீர்வை மற்றும் கரும்பு வளர்ச்சித் துறையும் ராஜேந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மீண்டும் அமைச்சராகியுள்ள ஆவடி நாசருக்கு சிறுபான்மை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK New Minister Senthilbalaji Nasar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->