செந்தில்பாலாஜி, அவரின் சகோதரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை - அமலாக்கத்துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

15 மாதகாலம் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

அதுவும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 

அடுத்த சில நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், உதவியாளராக இருந்த சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில், எம்பி, எம்எல்ஏக்கள் மீது உள்ள வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.  


 Chennai Court additional charge sheet 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Senthilbalaji case ED case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->