ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்த முடியாது - எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு தகவல்.!!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரானவர் எஸ்.ஜே.சூர்யா. 'சூர்யாவின் சனிக்கிழமை', கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், சமீபத்தில் வெளியான விக்ரமின் "வீரதீர சூரன்" என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது எஸ்.ஜே.சூர்யா பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', கார்த்தியுடன் 'சர்தார் 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 'கில்லர்' என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

'நான் நடிகனாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டது. ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்திக்கொண்டு இருக்க முடியாது. அதற்காக நான் வரவில்லை. 'கில்லர்' என்கிற படத்தை இயக்கி நடிக்க போகிறேன். என்னுடைய இயக்கத்தை பார்க்க ஆசைப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக அது பிடிக்கும்' என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sj surya say no acting in villan role


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->