#BREAKING || நாளை பிரச்சாரத்தை தொடங்கும் Dr.அன்புமணி இராமதாஸ்.! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 

"தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை மறுநாள் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பரப்புரை விவரம் வருமாறு:

13.02.2022   ஞாயிற்றுக்கிழமை - சென்னை மாநகரம்
14.02.2022   திங்கட்கிழமை -     காஞ்சிபுரம் மாவட்டம்
15.02.2022   செவ்வாய்க்கிழமை - சேலம் மாவட்டம்
16.02.2022   புதன்கிழமை - தருமபுரி மாவட்டம்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani Ramadoss Election Campaign 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->