Senthil Balaji || வலுவான வாதம் இல்லாததால் பொய்! கபில் சிபில் குற்றச்சாட்டுக்கு ED மறுப்பு!
ED denies KapilSibil allegation on Senthil Balaji forced to join BJP
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வின் முன்பு நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் ஏன் பாஜகவில் இணைய கூடாது என அமலாக்கத்துறை விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும்" என வாதிட்டு இருந்தார்.
அமலாக்கதுறை அதிகாரிகள் மீது கபில் சிபில் சுமத்திய குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டார்கள் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கூறியது அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த சமயத்திலும் யாரும் அவரிடம் கேட்கவில்லை.
செந்தில் பாலாஜியும் அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டும் என்பதற்கு வேறு வலுவான வாதங்கள் இல்லாததனால் இந்த பொய்யை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் தற்போது முன்னெடுக்கிறார்கள். இந்த வாதத்தின் போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
ED denies KapilSibil allegation on Senthil Balaji forced to join BJP