ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார் - எடப்பாடி பழனிச்சாமி பதிலடி!
Edappadi Palanisamy AIADMK reply to CMStalin DMK
ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார் என்று, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "நான் கனவு காணவில்லை, முதல்வர் ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்.
அதிமுகவுக்கு எந்த சரிவும் இல்லை, திமுகவுக்கு தான் சரிவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. பெரிய அளவில் கூட்டணி இல்லாமலேயே அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், "எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை” என்று
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல கவனித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அது நடக்காது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Edappadi Palanisamy AIADMK reply to CMStalin DMK