நெருங்கும் டானா புயல்: தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
Dana Cyclone warn flag Tamilnadu
வங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றது.
வரும் 25ம் தேதி அதிகாலை இந்த டாணா புயல் ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த டாணா புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு வரும் 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.
இதற்கிடையே, டானா புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்று டானா புயல் உருவாகி, கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
Dana Cyclone warn flag Tamilnadu