அதிமுகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்த தேசிய கட்சி - உடைகிறதா திமுக கூட்டணி?! பகிரங்கமாக அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக் கூடிய பழனிசாமி, திமுக அரசின் செல்வாக்கு மக்களிடையே வளர்ந்துகொண்டிருக்கிறதே என்ற பொறாமையில், திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று பேசி வருகிறார்.

மேலும், திமுக கூட்டணி விரைவில் உடையப் போகிறது என்று பழனிசாமி ஜோசியராகவே மாறியிருக்கிறார். இப்போது அவர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருக்கிறார்.

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது. பழனிசாமிக்கு தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு யோக்கியதை இல்லாமல், வளர்ந்து நிற்கும் திமுகவையும், அரசையும் பார்த்து ஜோசியம் கூறிவருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சேலம் வனவாசியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு நான் முதலமைச்சராக ஆவேன் என்று உதயநிதி ஸ்டாலினை தவிர, வேறு ஒருவராவது சொல்ல முடியுமா?

ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். அதிமுகவுக்கு எந்த சரிவும் இல்லை, திமுகவுக்கு தான் சரிவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. பெரிய அளவில் கூட்டணி இல்லாமலேயே அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சி எங்களிடம் பேசியுள்ளது.

வலிமையான கட்சியான அதிமுக பூத்துக் குலுங்கும் மலர் போன்றது. என்றும் மலராக அதிமுக பூத்துக் குலுங்க, கூட்டணி கட்சிகள் தேனீக்களாய் வரும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say about Alliance DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->