ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு! காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுக நேரடியாக களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை, புறக்கணிக்கிறது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை புறக்கணிப்பதற்கு உண்டான காரணமாக, கடந்த முறை இதே தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை படு குழியில் தள்ளி முறைகேடான முறையில் தேர்தலை சந்தித்து திமுக வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி புறக்கணிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது தற்போது களத்தில் திமுக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளன. 

பாஜக நேரடியாக களமிறங்குமா? அல்லது அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode East bipole election ADMK statement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->