நாட்டின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர் மோடி - ஜி. கே. வாசன் பேட்டி! - Seithipunal
Seithipunal



தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் செய்தியாளர்களுக்கும், மக்களுக்கும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகள், செயல்படுத்திய பல நல்ல திட்டங்கள், கொரோனா பெருந்தொற்றின்போது மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் தான் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்திய மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்திருப்பது, காங்கிரஸின் இந்தியா கூட்டணியினரின் பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் தமிழகத்தில் திமுகவின் பணபலம் வென்றுள்ளது.

திமுகவின் பண பலம், அதிகார பலம் இதைத் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளனர். இதற்கு கூட்டணியினரின் ஒற்றுமையே காரணம். நாட்டின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி. 

அவர் தலைமையில் மீண்டும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நல்லாட்சி மலர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜி. கே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G K Vasan Says About P M Modi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->