74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு முதலீடு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. இதனுடைய முதலமைச்சரின் மு க ஸ்டாலின் துபாய், அபிதாபி ஆகிய நாடுகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார். 

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாட்டை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 60 புத்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்களால் ரூ. 1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

industrial investor conference in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->