சி.வி சண்முகத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் ரத்து.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரு,ம் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் மீது தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி சண்முகத்துக்கு  எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madrashc quashed cases filed by TNgovt against CVeShanmugam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->