எனக்கும் முதலமைச்சராக விருப்பம் இருக்கு - பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தனக்கும் முதலமைச்சர் ஆக விருப்பம் உள்ளதாக, மகாராஷ்டிரா மாநில தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "அரசியல் கட்சிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் கட்சிகள் தலைவர் பதவிக்கு வர வேண்டும், முதலமைச்சராக வரவேண்டும் என்று விரும்புவார்கள். 

என்னை கேட்டாலும் எனக்கும் அந்த விருப்பம் உள்ளது. ஆனால் முதலமைச்சராக ஆவதற்கு பெரும்பான்மையை வெற்றியை பெற வேண்டும். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 145 இடங்களையாவது நாம் பெற வேண்டியது அவசியம். 

நம் விருப்பத்தை பெற முயற்சி செய்தால் முடியும். வாக்காளர்களின் கைகளில் தான் அது உள்ளது. நாங்கள் அனைவரும் மெகா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர உழைத்துக் கொண்டிருக்கிறோம். 

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்பு, முதலமைச்சர் யார் என்பதை கூடி அமர்ந்து முடிவு எடுப்போம். இந்த தேர்தலை எக்நாத் ஷிண்டே தலைமையில் எங்கள் கூட்டணி போட்டியிடும்" என்று தெரிவித்தார். 

பாஜக கூட்டணியில் உள்ள சில கூட்டணி கட்சிகள் தலைவர்கள் முதலமைச்சர் ஆவதற்கு தங்களது விருப்பங்களை தெரிவித்து வரும் நிலையில், அஜித் பவாரின் இந்த பேட்டி பேசு பொருளாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharastra Ajith Bhawar CM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->