உங்கள் கொள்கை மக்களை‌ சுட்டெரிக்கிறது - கார்கே கடும் விமர்சனம்.!! - Seithipunal
Seithipunal


வெயிலை விட உங்களது கொள்கைகள் தான் மக்களை சுட்டெரித்து வருகிறது 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள்; வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வர்.

1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான்; வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் மக்களை சுட்டெரித்து வருகிறது.

சீனா என்ற பெயரை கூட உச்சரிக்காதவர் தானே நீங்கள்? கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போதும் சீனா என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் அவர்களை இதில் எந்த தொடர்பும் படுத்தாமல் இருந்து விட்டீர்கள்.

இந்தியாவை மேலும் பலவீனப்படுத்திவிட்டு தற்போது வரை அருணாச்சல் பிரதேசம் லடாக் உத்தராகண்ட் பகுதிகளில் சீனா இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்களை அமைத்து வரும் சூழலிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீன பொருட்களின் இறக்குமதியை கிட்டத்தட்ட 54.76% வரை இந்திய அதிகாரித்துள்ளது இதுதான் நீங்கள் அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையாக என நரேந்திர மோடியை மல்லிகார்ஜுன கார்த்திக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MallikarjunaKharge criticized BJP Narendra Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->