பல தேர்தல்களை பார்த்த எங்களுக்கு, இந்த தேர்தல் பெரிதல்ல - அமைச்சர் துரைமுருகன்!
Minister duraimurugan say about Erode By Election ADMK Report
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/sengottaiyan 1-mdfxp.png)
அதில் "ஈரோட்டில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே திமுக கூட்டணிக் கட்சிகள் கூடாரங்கள் அமைத்து உள்ளனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியின் செயல்களை தடுக்க வேண்டும்" என்று செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார்.
இதேபோல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற வாக்காளர் பட்டியலில் இருக்கின்ற முறைகேடுகளை, மோசடிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. புகாராக அளித்தார்.
![](https://img.seithipunal.com/media/CV S.png)
அதில், "எங்கள் ஆய்வின்படி, மொத்த வாக்காளர்கள் 2212876 பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அவர்களின் முகவரியில் இல்லாதவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் பேர், இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கப்படாமல் உள்ளவர்களின் எண்ணிக்கை 9947 பேர். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் இடம் பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை 1009 பேர். இது மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் ஆகும்" என்று அந்த புகாரில் சிவி சண்முகம் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துறைமுருகனிடம் அதிமுகவினரின் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
![](https://img.seithipunal.com/media/DMK%20Durai%20Murugan.jpg)
அதற்க்கு அவர், "இந்த தேர்தல் எங்களுக்கு பெரிதல்ல. பல தேர்தல்களை பார்த்த எங்களுக்கு, இந்த தேர்தல் பெரிதல்ல. அதிமுகவினர் புகார் தரட்டும், தேர்தல் ஆணையம் பதில் சொல்லட்டும்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
English Summary
Minister duraimurugan say about Erode By Election ADMK Report