பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல்!...பீகாரில் ரூ.30,000 மதிப்பில் கள்ளச்சாராய பொருளாதாரம் இயங்கி வருகிறது - தேஜஸ்வி யாதவ் கடும் சாடல்! - Seithipunal
Seithipunal


பீகாரில் பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல் என்று, திர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் உயிரிழந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக  தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரில் ஒவ்வொரு சந்திப்புகளிலும் மதுக்கடைகளைத் திறந்து, மதுவிலக்கு என்ற பெயரில் விஷ சாராயம் குடித்து ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த முதல்வர், இப்போது மகாத்மா போல் நடிக்கிறார்.

முதல்வர் திரு. நிதிஷ் குமார் பீகாரில் மது நுகர்வை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக கூறியுள்ள அவர், இப்போது சட்டவிரோத மதுபானங்களை விற்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சாடியுள்ளார்.

மேலும், பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல் என்றும், சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருவதாக விமர்சித்துள்ள .தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitishkumar biggest scam is total alcohol prohibition bihar has rupees 30000 crore bootleg economy tejashwi yadav slams him


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->