#BigBreaking | அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திடீர் திருப்பம் : சற்றுமுன் நீதிபதி எடுத்த அதிரடி முடிவு.!
ops admk case judge krushnan ramasamy announce
அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதற்கு முன்னதாக, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் மனு அளித்துனர்.
ஓபிஎஸ்-ன் இந்த கோரிக்கையை நிராகரித்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று, தலைமை நீதிபதியிடம் ஓ.பி.எஸ். தரப்பு மீண்டும் முறையிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்கள் முன் வாதிட விரும்புவதாக ஓபிஎஸ் தரப்பில், அதே தனி நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்றக் கூடிய விவகாரத்தில் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.
மேலும், தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெற்றுவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், பொதுக்குழு வழக்கை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.
English Summary
ops admk case judge krushnan ramasamy announce