சென்னை வரும் பிரதமர் மோடியை முதலில் வரவேற்க உள்ளது இவரா? அப்போ முதல்வர் ஸ்டாலின்?!  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து, பேகம்பேட்டில் ஏற்பாடு செய்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை புறப்பட்டுச் வந்துள்ளார்.

சென்னை வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். மேலும், அமைச்சர் துரை முருகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம் வரும் பிரதமர் மோடிக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் வரவேற்பு அளிக்கின்றனர்

ஐ.என்.எஸ். அடையாறு தளம் வரும் பிரதமர், கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi chennai edappadi k palanisami


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->