#சற்றுமுன் || பாமகவில் இருந்து நீக்கப்பட்ட மாவட்ட துணைத் தலைவர்.!  - Seithipunal
Seithipunal


பா.ம.க.,வின் வேலூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் என்பவர் அக்கட்சியில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

"வேலூர் மாநகரத்தைச் சேர்ந்த வேலூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், 

இன்று  (12.02.2022) சனிக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். 

அவருடன்  பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்"

இவ்வாறு பாமக தலைமை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk announce vellore saravanan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->