#BreakingNews: ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் முன்னிலை!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியிலும் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

 இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு  வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் வாக்கு எனும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதியில் இருந்து  முன்னிலை நிலவரம்  வந்த வண்ணம் உள்ளன.

 அந்த வகையில் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு என்ற செய்தி அரசியல் வட்டாரத்தை பேசப்பட்டு வந்த நிலையில், ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி இரண்டு தொகுதியிலும் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghul gandhi two thoguthi vayanadu and rebareli first


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->