நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகம் - பிரதமர் மோடி வாழ்த்து!
Ramzan Festival PM Modi wish 2025
இன்றைய தினம் நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள், ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மத நல்லிணக்கம், சகோதரத்துவம், பரிவு, கருணை போன்ற உயரிய வாழ்வியல் பண்புகளை வழிகாட்டும் ரம்ஜான் பண்டிகை, இஸ்லாமியர்களிடையே மட்டுமின்றி சமுதாயத்திலேயே நன்மை, ஒற்றுமை, அமைதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறப்புமிக்க நாளாகப் போற்றப்படுகிறது.
நாடு முழுவதும், மஸ்ஜித்கள், குடும்பங்கள், சமூகக் கூடங்கள் ஆகிய இடங்களில் உற்சாக விழாவாக இன்றைய பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவை மேலும் வலுப்பெற வழிவகுக்கட்டும். இஸ்லாமிய சகோதரர்களின் எல்லா முயற்சிகளிலும் வெற்றி, மகிழ்ச்சி, அமைதி நிலவட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Ramzan Festival PM Modi wish 2025