சவுக்கு சங்கர் தான் அதை நிரூபிக்க வேண்டும்! செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி!
savukku shankar CBCID Congress selvaperunthagai
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஊடகவியலாளர், யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்த அவதூறான கருத்துக்களைச் சொல்லியதாகக் கூறி, சிலர் அவரது வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி, கழிவுநீர் மற்றும் மலம் வீசி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் கண்டனம்:
இந்த சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், பாஜக அண்ணாமலை, நாம் தமிழர் சீமான், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு:
சவுக்கு சங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்:
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சூறையாடல், கழிவுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
செல்வப்பெருந்தகை விளக்கம்:
"இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன், ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை அவமதித்தது தவறு. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் என நிரூபிக்கட்டும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
English Summary
savukku shankar CBCID Congress selvaperunthagai