கெஜ்ரிவாலுக்கு ஜாமின் உறுதி.!! சிக்னல் கொடுத்த நீதிமன்றம்.. குஷியில் ஆம் ஆத்மி.!! - Seithipunal
Seithipunal


டெல்லூ அரசின்‌ மது பான கொள்கை முறைகேட்டு வழககில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இடைக்கால ஜாமினுக்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவுறுத்தி உள்ளார்.

இதனை அடுத்து கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதன் மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sc ordered ed give condition for aravind kejriwal bail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->