10 வருடங்களாக பேசாத பா.ஜ.க… ஓட்டுக்காக பேசுகிறது - சீமான் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து இன்று தர்மபுரியில் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, திராவிட கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாதது. பீகாரில் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

தமிழகத்தில் அது நடக்கவில்லை. கச்சத்தீவு குறித்து பேசாத பா.ஜ.க தற்போது ஏன் கேள்வி எழுப்புகிறது. பா.ஜ.க சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் அரசியலாகும். 

6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என்பதை மாற்றி 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என மாற்றப்பட வேண்டும். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டுவிட்டு நாட்டுக்காக உழைக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman campaign speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->