அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் - ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்த நிர்வாகிகள் - தேனி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, தேனி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று, தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.

கட்சிக்குள் பிளவு உள்ளது தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்.

மேலும், தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி ஓபிஎஸ் இடம் வழங்கி உள்ளோம் என்றும், சசிகலா, தினகரன் இருவரையும் கட்சியில் இணைத்தாலே பிரச்னை தீர்ந்துவிடும் என்றும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்.

மேலும், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் உறுதி அளித்ததாக தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THENI ADMK MEMBERS MEET OPS FOR SASIKALA


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->