தமிழக அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து, சாலையில் உருண்டு விழுந்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்
tn govt bus accident near dharmapuri
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள சவுளூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் அரசுப்பேருந்தில் இன்று பள்ளி மாணவர்கள் ஏரிச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அரசுப்பேருந்து சவுளூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது திடீரென பேருந்தின் கடைசி படிக்கட்டு உடைந்துள்ளது. அப்போது படிக்கட்டில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையில் விழுந்துள்ளனர்.
இதில் ஒரு மாணவனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் படிகட்டு உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
tn govt bus accident near dharmapuri