தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு! நாளைக்குள் அனைத்திற்கும் பதில் - பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவது தொடர்பாக, காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்திருந்தனர். 

இந்த நிலையில், விழுப்புரம் டிஎஸ்பி மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். 

இந்த கடிதத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடு, மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எவ்வளவு பேர் வருவார்கள்? குடிநீர், மருத்துவம், கழிப்பறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? 

மாநாடு முடிந்த பிறகு சேரக்கூடிய குப்பைகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மொத்தம் 21 கேள்விகளை விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் எழுப்பி இருந்தார். 

இந்நிலையில், இந்த கேள்விகள் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கப்படும் என்று, அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் துறை எழுப்பி உள்ள இந்த 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Maanadu Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->