பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு.. விஜயகாந்த் ரூ.5 லட்சம் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவ தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.

அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தேமுதிக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். முன்னதாக, திமுக சார்பில் ரூ. 1 கோடியும், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijaykanth donate 5 lakhs for srilanka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->