#BigBreaking || விக்கரவாண்டி தனியார் கல்லூரி வளாகத்தில், மாணவி தற்கொலை முயற்சி.! கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் கே கே ரோடு, மணிநகர் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி, இன்று பிற்பகல் கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

படுகாயம் அடைந்த மாணவியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. மிகவும் கவலைக்கிடமான நிலையில், அவரின் உடல் நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் பெற்றோர், உறவினர்கள் தற்போது மருத்துவமனைக்கு வந்துள்ளதால், அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikravandi college girl attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->