இந்தியாவில் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!
Indian Whats app accounts ban
மெட்டா நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது.
பயனர்கள் அளித்த புகார்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறிய காரணங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம் முதல் அலுவலகங்கள் வரை, தகவல் பரிமாற்றத்திற்கான முக்கியமான கருவியாக வாட்ஸ்அப் செயலி இருந்து வருகிறது.
அரசியல் கட்சி முதல் அரசாங்கம் வரை இதனை செய்தி பரிமாறும் தளமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது.
இதன் பயனர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மெட்டா தனது சமூக ஊடக தளத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 84 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, வாட்ஸ்அப் விதிமுறைகளை மீறுதல், சட்டவிரோத செயல்பாடுகள், மற்றும் பயனர் புகார்கள் போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட கணக்குகளில் 16 லட்சம் புகாரின்றி தற்காலிகமாக முடக்கப்பட்டன. மேலும், 16 லட்சம் புகார்கள் கிடைத்தவுடன் முடக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மெட்டாவிற்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Indian Whats app accounts ban