ஏற்றத்தாழ்வு சரி செய்தாக வேண்டும்.. சாதிமறுப்பு திருமணம் அழிவிற்கே வழிவகுக்கும்.. நித்யானந்தா கொந்தளிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர் நித்யானந்தா. இவர் மீது பல சர்ச்சை கருத்துக்கள், பாலியல் பலாத்கார வழக்குகள், கடத்தல் வழக்குகள் விசாரணை நடைபெற்று, இவரை கைது செய்ய இன்டர்போல் காவல்துறை ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா தனது பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றுவதை தவிர்க்காமல் செய்து வரும் நிலையில், இவர் எங்கு இருக்கிறார்? எப்படி பக்தர்களிடையே உரையாற்றி வருகிறார்? தினமும் நேரப்படி சரியாக எப்படி உரையாற்றுகிறார்? என்ற பல விஷயங்களுக்கு இன்று வரை விடை கிடைக்காத மர்மமாக இருக்கிறது. 

முகநூலில் இவர் தினமும் தனது பக்தர்களிடையே பேசுவது இயல்பான ஒன்றாகும். அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நித்யானந்தா தனது பக்தர்களுக்கு உரையாற்றுகையில், இப்போது ட்ரெண்டிங்கில் சென்ற மரிதாஸ், மதன்குமார் மற்றும் இந்துத்துவா மற்றும் பெரியவாதிகளின் கொள்கை தொடர்பாக பேசியிருந்தார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், மாரிதாஸிற்கும், மதன்குமாருக்கும் எனது முழு ஆதரவை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பல விஷயங்களில் பல செய்தியாளர்களை நான் சந்தித்துவிட்டேன். இவர்கள் பேசுவது அனைத்தும் உண்மை தான். முன்னதாக பிரபல நாளிதழ் கூட என்னை வைத்து அன்னாசிப்பழ கர்ப்பம் என்ற பெயரில் கதையெழுத்தியதும் இதில் குறிப்பிடத்தக்கது. 

இந்து மக்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கோட்பாடுகள் என்றவை அன்றைய காலத்திலேயே அவர்களின் எதிர்கால சிந்தனை குறித்த ஆற்றலை நிரூபணம் செய்கிறது. இந்து கொள்கையில் உள்ள சாதிய கட்டமைப்புகள் தான் மிகவும் முக்கியமானது. சாதிகளுக்குள் உள்ள சிறுசிறு பிரச்சனைகள் கட்டாயம் சரி செய்யப்பட வேண்டும். 

அனைவரும் சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வேண்டும் என்பதே அதன் கோட்பாடு.. ஆனால் பின்னாளில் ஏற்பட்ட சூழ்ச்சி மற்றும் படையெடுப்புகள், போலி புரட்சி பேசும் நபர்களால் தீங்கு ஏற்பட்டு, சண்டை சச்சரவுகள் ஆரம்பித்தது. சாதி மறுப்பு திருமணம் என்பது கட்டாயம் அழிவிற்கு வழிவகை செய்யும். சாதி மறுப்பு திருமணங்கள் கட்டாயம் செய்ய கூடாது. 

இதற்கு முன்னர் இருந்த பல எண்ணங்களில் இருந்து பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தில் உள்ள சாதிகள் என்பது முக்கியம். சாதிகளில் உள்ள ஏற்றத்தாழ்வு பிரச்சனை சரி செய்யப்பட வேண்டும். அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை பேசி சரி செய்து கொள்ள வேண்டும். சாதி மறுப்பு திருமணம் என்ற பெரிய தவறை என் அன்பு பக்த கோடிகள் செய்ய வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithyananda Told about Hinduism Condition and Caste


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->