திருவாரூர்  || சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சிறப்பு வழிபாடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என்று தனி கோவில் ஒன்று உண்டென்றால் அது திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் உள்ளது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சாரதா நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. அதேபோல், இந்த ஆண்டு கடந்த 26-ந் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையும், சரஸ்வதி அம்மனுக்கு பால், பன்னீருடன் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் அம்மனுக்கு பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சரஸ்வதி அம்மனை தரிசித்து வருகின்றனர். 

இதை தொடர்ந்து, நாளை விஜயதசமி அன்று சரஸ்வதி அம்மனுக்கு பால வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 'அ' எழுத பழகி தங்களுடைய கல்வியை தொடங்குவதற்கான பூஜைகளும் நடைபெறும். இவ்விழாவையொட்டி அம்மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மற்றும் பேரளம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thiruvaroor saraswati pooja special function


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->