விராட்டை 05வது இடத்தில் இறக்குங்கள்; இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்..! - Seithipunal
Seithipunal


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. 

05-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் 03-ந்தேதி  தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதில், இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பிவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவாரா என்ற சந்தேகமும் எழும்பியுள்ளது. 

வேண்டும் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முழுவதும் விராட் கோலி 04வது வீரராக களம் இறங்கியுள்ளார். தொடர்ந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்தை அடித்து ஆட்டமிழந்துள்ளார். இதனால் அணியில் அவருடைய இடம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், இந்திய அணி நிதிஷ் ரெட்டியை 04வது இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், விராட் கோலியை 05-வது இடத்திற்கு இறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், 04-வது இடத்தில் அவரால் ரன்கள் அடிக்க முடியவில்லை. ஒரே ஷாட் மூலம் அவுட்டாகி வருகிறார்.உங்களால் ஸ்கோர் அடிக்க முடியவில்லை என்றால் அப்புறம் உங்களுடைய பேட்டிங் ஆர்டரை கீழே இறக்கவும் என்று கூறியதோடு, ரோகித் அதை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், விராட் கோலியை பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஏனென்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். என்று  பாசித் அலி மேலும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drop Virat to No5 Former Pakistan player advises Indian team


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->