#BigBreaking :: ரோகித் ஷர்மாவின் பதவி பறிப்பு..?! இந்திய அணியின் புதிய கேப்டனாகும் ஹர்திக் பாண்டியா..!!
Hardik Pandya will be new captain of Indian cricket team
இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது. அதன் பிறகு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முழு நேர கேப்டனாக நியமிப்பது குறித்து பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இன்னும் ஓரிரு நாட்களில் தனது முடிவை தெரிவிப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியதாகவும் தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் வரை ரோகித் ஷர்மா கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ இத்தகைய முடிவு எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா தனது முடிவு தெரிவித்தவுடன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Hardik Pandya will be new captain of Indian cricket team