இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் - அதிகாரபூர்வமாக வெளியிட்ட  பி.சி.சி.ஐ..! - Seithipunal
Seithipunal


இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை பி.சி.சி.ஐ. வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் செய்தியாள்களர்களை சந்தித்த ரோஜர் பின்னி தெரிவித்ததாவது, "பிசிசிஐ தலைவராக நான் முதலில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். 

முதலில், வீரர்களுக்கு ஏற்படும் காயங்களைத் தடுப்பது. ஏனென்றால், உலகக் கோப்பைக்கு சற்று முன்பு ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்தார், இது ஆட்டத்தின்  முழு திட்டத்தையும் பாதிக்கிறது. மேலும் இரண்டாவதாக, நாட்டில் உள்ள ஆடுகளங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cricket Board new leader rojar binni


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->