ஊழல் புகார் : செபி தலைவர் நேரில் ஆஜராக நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


ஊழல்  புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபி தலைவர் மாதவி புரி புச் 2025ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நேரில் ஆஜராக டில்லி லோக்பால் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் 'அதானி' குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில்,முதலீடு செய்திருப்பதாக, ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால், இவையனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார்.

இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இந்த நிலையில், செபி தலைவர் மாதபி பூரி புச் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. மஹூவா மொய்த்ரா லோக்பால் அமைப்பில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், செபி தலைவர் மாதவி புரி புச் ஊழல் செய்துள்ளதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா, ஊழல் தடுப்பு கண்காணிப்பு, லோக்பால் அமைப்பிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாதவி புரி புச் 2025ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஆஜராக டில்லி லோக்பால் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா உள்ளிட்ட புகார்தாரர்களும், ஜனவரி 28ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corruption case: Sebi chief summoned to appear before it


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->