ஐபிஎல் 2025: 'கேப்டன்ஷிப் வேண்டாம்!' - கே.எல். ராகுல் - Seithipunal
Seithipunal


T20 18-வது IPL சீசன் வருகிற 22 - 25ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க ஆட்டமான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோத உள்ளது.

இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் கேப்டன் பதவியை நிராகரித்துள்ளதாகவும் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் கே.எல் ராகுல் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என பல விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இதில் அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடதக்கது. மேலும் இது குறித்த கமெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2025 No captaincy KL Rahul


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->