தமிழக அரசு விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் உதவி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்காக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

 கடன் தொகை: ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, ஒவ்வொரு மாட்டிற்கும் ரூ.60,000 வழங்கப்படும்.
 திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டு காலம்
 வட்டி வீதம்: 7% ஆண்டு வட்டி
 பயனாளியின் பங்கு: 5%

யார் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)

 பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர்
 ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
 வயது: 18-60
 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உறுப்பினராக இருக்க வேண்டும்
 குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இந்த உதவித் திட்டம் கிடைக்கும்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

 சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
 வங்கி கோரும் அடமான ஆவணங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்:

 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்)
 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
 கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்

இந்த கடன் உதவியைப் பயன்படுத்தி, பால் உற்பத்தியில் ஆர்வமுள்ள விவசாயிகள் பால் பண்ணை தொடங்கிக் கொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1 lakh loan assistance to Tamil Nadu farmers to buy dairy cows


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->