14 வயது சிறுமி கர்ப்பம்.. 65 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது.! - Seithipunal
Seithipunal


14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று சோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் விசாரணை செய்ததில் முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ் வயது 65 என்பவர் பள்ளி விடுமுறை நாளின் போது அந்த சிறுமி ராணுவ வீரர் வீட்டிற்கு சென்று சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார்.

அவ்வாறு வேலைக்கு செல்லும்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்னால் ராணுவ லாரன்ஸ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதன் மூலம் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமானதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 years old girl pregnant ex millitary man arrested in Thirupur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->