வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்.. பதறும் தமிழகம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஐந்து வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் கடித்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்திருக்கும் சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறி நாய் கடித்து காயமடைந்த 15 பேர் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 people injured in rabid dog bite in Theni


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->