17 வயது சிறுமி கர்ப்பம்.. 18 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 18). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் முதலில் நட்பாக பழகி உள்ளார். அதன் பின்னர் நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் செல்வம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இதில் சிறுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்ததில் வாலிபர் செல்வம் திருமண ஆசை காட்டி பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும் அதனால் தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை 7 மாத கர்ப்பமாகிய வாலிபர் செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

17 years old girl pregnant 18 old boy arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->