சென்னையில் 2 நாட்கள் மின்சார ரெயில்கள் ரத்து - காரணம் என்ன?
18 eletric train cancelled in chennai
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 18 மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இன்று காலை 08.05, 9, 9.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இதேபோல் மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் இடையே செல்லும் 9.55, 10.55,12, 1, 2.30 செல்லும் மின்சார ரயில்கள்,

சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் 11.45 மற்றும் 1.15 மணி ரயில்கள் மற்றும் சென்னை கடற்கடரை – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணி அளவில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் வரும் மார்ச் 1, 2025 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது.
மேலும், செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், இதேபோல சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே மற்றும் கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இடையே பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்று முதல் வரும் மார்ச் 1, 2025 வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால நேரங்களில் பொதுமக்கள் வேற்று போக்குவரத்து சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
18 eletric train cancelled in chennai