வேலூர் || சிறைக் கைதிக்கு கஞ்சா கொடுத்த 2 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து வரும் இவரைப் பார்க்க அவர்களுடைய நண்பர்களான வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த மோகன், பாகாயத்தை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் பிற்பகல் சிறைக்கு சென்றுள்ளனர். 

அங்கு விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருந்த இருவரும் திடீரென நூதன முறையில் வாயில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிராம் அளவுக்கு சிறிய கஞ்சா பொட்டலத்தை இரும்பு கம்பிகளுக்கு மறுபக்கம் இருந்த விஷ்ணுவிடம் துப்பியுள்ளனர்.

அதனை விஷ்ணு எடுத்து மறைக்க முயன்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து விஷ்ணு அந்த கஞ்சா பொட்டலத்தை தூக்கி எறிய முயன்றுள்ளார். உடனே சிறைக்காவலர்கள் விஷ்ணுவை கையும் களவுமாக பிடித்ததைத் தொடர்ந்து, ஹரிஷ் மற்றும் மோகன் ஆகியோரை பாகாயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பின்னர் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஹரிஷ், மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 peoples arrested for kanja provide to prison in vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->