மதுரை :: 100 கிலோ கஞ்சா பறிமுதல்.! கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை நான்குவழி சாலைவழியாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தது கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த மன்சூர் அலி, முத்தலிப் மற்றும் நாசர் என்பதும் அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 100 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தல் சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 kerala youths arrested for 100 kg Ganja seized in madurai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->